உம்மை நம்பி வந்தேன்
உம்மை நம்பி வந்தேன்
நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல -2
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் -2
ஏல்- எல்லோகே ஏல்- எல்லோகே
ஏல்- எல்லோகே உம்மை துதிப்பேன் -2
(உம்மை நம்பி)
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் -2
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் -2
ஏல்- எல்லோகே ஏல்- எல்லோகே
ஏல்- எல்லோகே உம்மை துதிப்பேன் -2
(உம்மை நம்பி)
வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் எனக்கு தந்தீர் -2
பரதேசியாய் நான் தங்க்கினதை
சுதந்திரமாக மாற்றி தந்தீர் -2
ஏல்- எல்லோகே ஏல்- எல்லோகே
ஏல்- எல்லோகே உம்மை துதிப்பேன் -2
(உம்மை நம்பி)
Comments
Post a Comment