மன்னிப்பவன்தான் மனிதன்
மன்னித்து மறப்பவன் மனித தெய்வம் -2
எண்ணிக்கை இல்லாத நம் பிழையை இறைவன்
மன்னித்து மறந்தாரே
இல்லையேல் மண்ணில் வாழ்வார் யாரே
மன்னிப்பவன்தான் மனிதன்....
சுந்தர மழலைகளை சுட்டடெரித்த நெருப்பை
மன்னித்து மறந்துவிட்டோம்
நம் சொந்தங்களை சொத்துக்களை
கொண்டுபோன கொடும் சுனாமியை மறந்துவிட்டோம் - 2
எந்த மனிதன் குற்றம் புரியவில்லை இங்கு
மன்னிப்பு இல்லையேல் மறுவாழ்வில்லை
(மன்னிப்பவன்தான் மனிதன்)
தன்னைப்போல் அயலாரை அன்பு செய்யும் மாந்தர்
மன்னித்து மகிழ்ந்திருப்பார்
பிறரை மன்னிக்கவே மனமின்றி
இருப்போர்கள் தீரா நோய்களில் உளன்றிருப்பார் -2
மன்னிப்பவர்க்கே குற்றம் மன்னிக்கப்படும்
என்று நம் தேவன் இயேசு நம்மை மன்னிக்கவே வந்தார்
(மன்னிப்பவன்தான் மனிதன்)
எண்ணிக்கை இல்லாத நம் பிழையை இறைவன்
மன்னித்து மறந்தாரே
இல்லையேல் மண்ணில் வாழ்வார் யாரே
மன்னிப்பவன்தான் மனிதன்....
Comments
Post a Comment