Posts

Showing posts from September, 2013

 அனைத்தையும் செய்து முடிக்கும்

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே  நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா (யோபு 42:2)   1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்     எனக்கென முன்குறித்த எதையுமே     எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் (யோபு 23:13,14)     உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்   2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்கு     காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்     நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (யோபு 7:17)   3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்     நான் போகும் பாதைகளை அறிந்தவரே (யோபு 23:20,12)     உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்    4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே (யோபு 9:10)     காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னை    அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே   5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே     இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை     என் கண்கள் தானே அந்நாளில் காணுமே (யோபு 19:25)       எப்போது வருவீரையா     என் உள்ளம் ஏங்குதையா

 அதிகாலை ஸ்தோத்திரபலி

அதிகாலை ஸ்தோத்திரபலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் ஆராதனை ஸ்தோத்திரபலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் (2)   1. எபிநேசர் எபிநேசர்     இதுவரை உதவி செய்தீர்    எபிநேசர் எபிநேசர் (1 சாமு 7:12)   2. பரிசுத்தர் பரிசுத்தர்    பரலோக ராஜாவே    பரிசுத்தர் பரிசுத்தர் (ஏசா 6:3)   3. எல்ஷடாய் எல்ஷடாய்    எல்லாம் வல்லவரே    எல்ஷடாய் எல்ஷடாய் (ஏசா 9:6)   4. எல்ரோயீ எல்ரோயீ    என்னை காண்பவரே    எல்ரோயீ எல்ரோயீ (ஆதி 16:13,14)   5. யேகோவா யீரே    எல்லாம் பார்த்துக் கொள்வீர்    யேகோவா யீரே (ஆதி 22:14)   6. அதிசய தெய்வமே    ஆலோசனை கர்த்தரே    அதிசய தெய்வமே (ஏசா 9:6)   7. யேகோவா ஷம்மா    எங்களோடு இருப்பவரே    யேகோவா ஷம்மா (எசே 48:35)   8. யேகோவா ஷாலோம்    சமாதானம் தருகிறீர்    யேகோவா ஷாலோம் (நியா 6:24)   9. யேகோவா நிசியே     எந்நாளும் வெற்றி தருவீர்    யேகோவா நிசியே (யாத் 15:26)   10. யேகோவா ரஃபா     சுகம் தரும் தெய்வமே     யேகோவா ரஃபா (யாத் 15:26 )   Play video

 அடிமை நான் ஆண்டவரே

 அடிமை நான் ஆண்டவரே என்னை ஆட்கொள்ளும் என் தெய்வமே      தெய்வமே தெய்வமே    அடிமை நான் ஆட்கொள்ளும் (லூக் 1:38)   1. என் உடல் உமக்குச் சொந்தம் இதில்     எந்நாளும் வாசம் செய்யும் (1கொரி 6:19)   2. உலக இன்பமெல்லாம் நான்     உதறித் தள்ளி விட்டேன்   3. பெருமை செல்வமெல்லாம் இனி     வெறுமை என்றுணர்ந்தேன்   4. வாழ்வது நானல்ல என்னில்     இயேசுவே வாழ்கின்றீர் (கலா 2:20)   5. என் பாவம் மன்னித்தருளும் உம்     இரத்தத்தால் கழுவி விடும் (1 யோ 1:7)   6. முள்முடி எனக்காக ஐயா     கசையடி எனக்காக (யோ 19:1,2)   7. என் பாவம் சுமந்து கொண்டீர் என்     நோய்கள் ஏற்றுக் கொண்டீர் (மத் 8:17)

 அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்

Image
அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும் அபிஷேகம் தந்து வழி நடத்தும் முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்துப் பேசினீரே எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே (யாத் 3:2) எங்களை நிரப்பி பயன்படுத்தும் எலியாவின் ஜெபத்துக்கு பதில் தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே (1 இரா 18:38) எங்களின் குற்றங்களை எரித்துவிடும் ஏசாயா நாவைத் தொட்டது போல‌ எங்களின் நாவைத் தொட்டருளும் யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே (ஏசா 6:7,8) எங்களை அனுப்பும் தேசத்திற்கு அக்கினி மயமான நாவுகளாக‌ அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே அந்நிய மொழியை பேச வைத்தீரே (அப் 2:3) ஆவியின் வரங்களால் நிரப்பீனிரே  இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட ( யாத் 13:21) எங்களை நிரப்பும் ஆவியினால்

 அன்பு கூறுவேன் இன்னும்

Image
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்   முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்   முழு பெலத்தோடு அன்பு கூறுவென்      ஆராதனை ஆராதனை - 2 எபிநெசரே எபிநெசரே இதுவரையில் உதவினீரே ‍ உம்மை எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை யோகோவா ராப்பா யோகோவா ராப்பா  சுகம்தந்தீரே நன்றி ஐயா - உம்மை

 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

Image
 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்  கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்  என் தேவனுக்குள் களி கூருவேன்  ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்  வயல்களிலே தானியமின்றிப் போனாலும்    மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்  தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்  எல்லாமே எதிராக இருந்தாலும்  சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்  உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்  ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும். இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

 என் தேவனால் முடியாதது

Image
என் தேவனால் முடியாதது ஒண்றும் இல்லை தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் -2 வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும் இல்லை வேறில்லை நாமம் வன்மதி போல் உள்ள துன்பமும் வன்கரத்தால் நீங்கிடும் நேர்மையின் வழியில் நடந்தாள் நன்மைகள் தினமும் தருவாரே உன்மையுள்ளவர் நீதிமான் கர்த்தர் மேலானவர் என் யேசுவின் நாமத்தால் சுகமாகாததா கொடும் வியாதி ஏதுண்டு இல்லை இல்லை -2 வசணம் விடுதலை தந்திடும் விண்ணப்பம் கேட்பவரே புலம்பும் இதயத்தை காண்பவர் புதிய வழிகாட்டுவார் வழுவாமல் என்றும் தாங்குவார் தம் வழுவான கரங்களால் அனைப்பார் உன்மையுள்ளவர் நீதிமான் சேனைகளின் கர்த்தரே - வசணம் விடுதலை உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒண்றுமிலையே - உம்மால் கூடாதது ஒண்றுமிலையே இப்பாடல்களை  mp-3 இல் பெற விரும்பினால்  அல்லது பாடல் இடம் பெற்ற Volume, அல்லது வேறு பாடல்கல், பாடல்வரிகள் தேவையானாலும் எங்கள் வலைபக்கத்தில் உள்ள Contact form இல் Message பகுதியில் உங்கள் படல்களை Type பண்ணி அல்லது Volume பெயரை Send பண்ணவும் உங்கள் Email ளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

 ஒருவராய் பெரிய அதிசயம்

Image
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர்தானே யேசையா -2 இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே -2 ஒரு அற்புதம் நாங்கள் காணச் செய்யுமே -2 ஆலேலுயா.............. ஆலேலுயா.............. தழும்புகலால் சுகமாக்குவேன் என்றவர் நீர்தானே யேசையா -2 இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே -2 ஒரு அற்புதம் நாங்கள் காணச் செய்யுமே -2 ஆலேலுயா.............. ஆலேலுயா.............. Nandry Vol 3 Song............

 பரலோகமே என் சொந்தமே

Image
பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ -2 என் இன்ப யேசுவை என்று காண்பேனோ -2 பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ வறுத்தம் பசிதாகம் மனத்துயரம் அங்கே இல்லை -2 விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்னவர் பாதம் சேர்வேன் -2     (பரலோகமே) யேசு என் நம்பிக்கயாம் இந்தப் பூமியும் சொந்தமல்ல -2 பரிசுத்த சிந்தையுடன் யேசுவை பின்பற்றுவேன் -2     (பரலோகமே) சிலுவையில் அறையுண்டேன் இனி நான் அல்ல யேசுவே -2 அவரின் மகிமையே எனது இலட்சியமே -2      (பரலோகமே)