அனைத்தையும் செய்து முடிக்கும்
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா (யோபு 42:2)
1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் (யோபு 23:13,14)
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (யோபு 7:17)
3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே (யோபு 23:20,12)
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்
4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே (யோபு 9:10)
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னை
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே
5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே (யோபு 19:25)
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா
Comments
Post a Comment