Posts

Showing posts from 2015

 பரத்தில் உள்ள எங்கள் பிதாவே

Image
பரத்தில் உள்ள எங்கள் பிதாவே உம் ராச்சியம் வருக உம் சித்தம் நிறைவேற -2  நீர் இல்லா  உலகம் வெருமையதே... அற்பமும் குப்பையும் அதே.... நீரில்லா வாழ்க்கை சுமையானதே.... வாரும் தேவா இந்த.. வேலை... -2                                     (பரத்தில் உள்ள) மன்னியும் எங்கள் மீறுதல்களை... தீர்த்திடும்  எங்கள் ஏக்கங்களை... பிறரின் குறைகள் பாராமல் நாங்கள் கிருபையிலே... என்றும் நிலைத்திடவே.. -2                                    (பரத்தில் உள்ள) காத்திடும்... தீய சூழ்நிலையிலே... நிரப்பிடும்... உந்தன் ஆவியால் இன்றே.. சாத்தானின் சூழ்ச்சிகள்.. உலகத்தின் நிந்தைகள் .. எல்லாவற்றையும் ஜெய்த்திடவே...                                     (பரத்தில் உள்ள)

 என் ஆசை நீங்கப்பா

Image
எனக்கு உம்ம விட்ட யாரும் இல்லப்பா  உங்க அன்ப விட்ட எதுவும் இல்லப்பா -2 என் ஆசை நீங்கப்பா  என் தேவை நீங்கப்பா என் சொந்தம் நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா-2 காண்கின்ற எல்லாம் ஒர் நாள் கரைந்து போகுமே தொடுகின்ற எல்லாம் ஒர் நாள் தொலைந்து போகுமே -2 என் ஆசை நீங்கப்பா  என் தேவை நீங்கப்பா என் சொந்தம் நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா -2   உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ அழியாத செல்வம் நீரே போதும் யேசுவே -2 என் ஆசை நீங்கப்பா  என் தேவை நீங்கப்பா என் சொந்தம் நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா -2

 நீரே போதும் நீரே போதும்

Image
நீரே போதும் நீரே போதும் நீரே போதும்  யேசுவே -2 கழுகைப்போல என்னை எழும்ப செய்வீர் உயரங்களில் என்னை பறக்க செய்வீர் -2 நீரே போதும் நீரே போதும் நீரே போதும்  யேசுவே -2 சிங்கத்தின் பிள்ளையாய் என்னை மாற்றினீர் சாத்தானை ஜெய்திடும் பலன் அளித்தீர் -2 நீரே போதும் நீரே போதும் நீரே போதும்  யேசுவே -2 பனையை போல என்னை செழிக்க செய்வீர் கேதுரு போல் என்னை வளர செய்வீர் -2 நீரே போதும் நீரே போதும் நீரே போதும்  யேசுவே -2

 உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பாத்து காத்திருக்கிறேன்

ஹாய் ப்ரிண்ட்ஸ் தமிழில்  கிறிஸ்தவ மின்-புத்தகங்கள்  இணையதளங்களில் இல்லாத காரணத்தால் என்னிடம் உள்ள ஓர் சில புத்தகங்களை வலைப்பதிவில் பதிவிடலாம் என்று நினைக்கிறேன். பதிப்புரிமை பிரச்சனைகள் வருமா? உலகத்தில் உள்ள எத்தனையோ புத்தகங்கள் பதிவிடும் போது  என் யேசுவுக்காக நான் இதனை செய்யலாம் என்று  நினைக்கிறேன். பதிப்புரிமை முக்கியம் தான் ஆனால் நான் பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்கள் எனக்கு உரிமையானவைதானே அதை நான் எப்படியும் உபயோகிக்கலாம் தானே... எனது முதல் வலைப்பதிவுக்கும் (http://tamilchristiansongsmp3.blogspot.com/)  முகபுத்தாக பக்கம் (https://www.facebook.com/pages/Christian-Tamil-Songs/171208259601051) தந்த ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி அதே போன்று இதற்கும் உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பாத்து காத்திருக்கிறேன்...... http://tamilchristianebooks.blogspot.com/

 தேவ சாயல் ஆக மாறி

Image
தேவ சாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன் – நானும் அந்த நாளும் நெருங்கிடுதே 1. அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை நான் களைந்தே தம் விண்ணவர் சாயல் அடைவேன் 2. பூமியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழிந்திடுமே கை வேலையில்லாத பொன் வீடு 3. கண்டடைந்து வாழ்ந்திடுவேன் காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகு போல பறந்தெழும்பி 4. ஜீவ யாத்திரை ஓடி முடித்து ஜீவக் கிரீடம் பெற்றிடுவேன் அதி விரைவாய் நிறைவேறுதே

 என்னை உம் கையில்

Image
என்னை உம் கையில் படைத்தேன்  முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும்  -2 குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே -2 என்னை உம் கையில் தவறிய பாத்திரம் நான் தவறுகள் நீக்கி என்னை தகுதியாய் நிருத்திடுமே ... குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே -2 என்னை உம் கையில் குறைவுள்ள பாத்திரம் நான் குறைவுகள் நீக்கி உந்தன் கருவியாய் பயன்படுத்தும் -2 குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே -2 என்னை உம் கையில்

 இதயத்தின் காயத்தை ஆற்றிடும்

Image
இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசையா -2 கரை கானா படகைபோல தடுமாறும் வாழ்கையையா -2 யோவானை போல உம் மார்பிலே இளைப்பாற வேண்டுமையா -2 பெலவீனமான என்னையும் உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2 காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே  -2

 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

Image
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்  திரட்சைச் செடி  பலன் கொடாமல் போனாலும்  கத்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்  என் தேவனுக்குள் களி  கூறுவேன்  ஒலிவ மரம் பலன் அற்று போனாலும்  வயல்களிலே தானியமின்றி போனாலும்                                                      (கத்தருக்குள்) மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றி போனாலும்                                                      (கத்தருக்குள்) எல்லாமே எதிராக இருந்தாலும்  சூழ்நிலைகள்  தொல்விபோல  தெரிந்தாலும்                                                       (கத்தருக்குள்) உயிர் நண்பன் என்னை விட்டு பிரிந்தாலும்  ஊரெல்லாம் என்னை தூற்றித்திரிந்தாலும்                                                                                                                                (கத்தருக்குள்)