Posts

Showing posts from 2016

 அன்பென்ற மழையிலே

Image
அன்பென்ற மழையிலே  அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு  வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே, அன்பென்ற மழையிலே  அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே  அதிரூபன் தோன்றினானே போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே, கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே, அன்பென்ற மழையிலே  அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு  வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே  வந்தவன் மின்னினானே, அன்பென்ற மழையிலே  அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே  அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு  வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே  வந்தவ

 ஆழமான ஆழியிலும்

Image
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு                                (ஆழமான ஆழியிலும்) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு -2 இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு -2 குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு -2 ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு எந்தக் காலத்திலும் மாறாத அன்பு -2                            (இது ஒப்பில்லாத)                            (இயேசுவின் அன்பு) மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு மகனாய் ஏற்றுக்கொண்ட மகா பெரிய அன்பு -2 என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு -2                            (இது ஒப்பில்லாத)                            (இயேசுவின் அன்பு)

 உம்மை நம்பி வந்தேன்

Image
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல -2 வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் -2 ஏல்- எல்லோகே ஏல்- எல்லோகே ஏல்- எல்லோகே உம்மை துதிப்பேன் -2             (உம்மை நம்பி) காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் -2 உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் -2 ஏல்- எல்லோகே ஏல்- எல்லோகே ஏல்- எல்லோகே உம்மை துதிப்பேன் -2             (உம்மை நம்பி) வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும் வேண்டியதெல்லாம் எனக்கு தந்தீர் -2 பரதேசியாய் நான் தங்க்கினதை சுதந்திரமாக மாற்றி தந்தீர் -2 ஏல்- எல்லோகே ஏல்- எல்லோகே ஏல்- எல்லோகே உம்மை துதிப்பேன் -2             (உம்மை நம்பி)

 ஜெபம் கேட்டீரையா

Image
ஜெபம் கேட்டீரையா ஜெயம்  தந்தீரையா-2  தள்ளாட விட வில்லையே தாங்கியே நடத்தினீ ரே  -2 புகழ்கின்றேன் பாட்டு பாடி புயல் இன்று ஓய்ந்தது புது ராகம் பிறந்தது  -2 நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே -2 கண்ணீரை கண்டடீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா   (புகழ்கின்றேன் ) எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே -2 எல்ரோயீ நீர்தானையா என்னையும் கண்டீரையா -2 (புகழ்கின்றேன் )    உறுதியாய் பற்றிக்கொண்டேன் உம்மயே நம்பியுள்ளேன் -2 பூரண சமாதானரே போதுமே உம் சமூகமே  -2 (புகழ்கின்றேன் )

 உம்மாலே எல்லாம் கூடும்

Image
உம்மாலே எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் -2 உங்க கிருபையே -2 என்னை தாங்கி நடத்தினதே -2                      (உம்மாலே எல்லாம்) அலைமோதும் வாழ்வில் அசையாமல் நிற்க்க நங்கூரமாக இருப்பவரே -2 காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப் படுத்தினதும் உங்க கிருபையே -2 உங்க கிருபையே -2 என்னை தாங்கி நடத்தினதே -2 கரடு முரடான பாதைகளில் வெளிச்சமாய் என்றும் இருப்பவரே -2 வழிகளில் எல்லாம் தூதர்கள் அனுப்பி காப்பதும் உங்க கிருபையே -2 உங்க கிருபையே -2 என்னை தாங்கி நடத்தினதே -2                      (உம்மாலே எல்லாம்)

 தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்

Image
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர் காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு -2 காத்திடுவார் என்றுமே ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு -2 காத்திடுவார் என்றுமே என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு -2 காத்திடுவார் என்றுமே